இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனிடையே நேற்று ஒரே நாளில் இந்தியாவில்  12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், இன்று நேற்றை விட கொரோனா பரவல் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,81,877-லிருந்து 4,48,91,989 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67,556 லிருந்து 67,806 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,300-லிருந்து 5,31,329 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10,765 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 9,833 பேர் வீடு திரும்பியுள்ளனர்.