நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா!

 
Covid

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி பாதிப்பு நேற்று 11 ஆயிரத்தையும் கடந்தது. நேற்று இந்தியாவில் 11 ஆயிரத்து 109 பேருக்கு   தொற்று பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,720 - ஆக உயர்ந்துள்ளது.  

ஒமைக்ரான் துணை வைரசான 'எக்ஸ்பிபி.1.16' தாக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.