இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று  முன் தினம் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 12,591 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,57,992-லிருந்து 4,48,69,684 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65,286-லிருந்து 66,170 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,230-லிருந்து 5,31,258 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 10,827 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,780 பேர் வீடு திரும்பியுள்ளனர்.