இந்தியாவில் நேற்றைவிட அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!

 
covid

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் இந்தியாவில்  4,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று  3,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,56,716 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 20 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு என்ணிக்கை 5,31,584 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 7,698 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,84,955 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 40,177 ஆக குறைந்துள்ளது.