இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 
covid test

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. நேற்று முன் தினம் இந்தியாவில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  நேற்று ஒரே நாளில் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் 542, டெல்லியில் 535, அரியானாவில் 399, தமிழ்நாட்டில் 329, கர்நாடகாவில் 321, குஜராத்தில் 260, இமாச்சல பிரதேசத்தில் 258, உத்தரபிரதேசத்தில் 188, ராஜஸ்தானில் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரத்து 837 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று குணமடைந்த 3,726 பேரும் அடங்குவர். தற்போது 32,814 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,620 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் குஜராத்தில் 3 பேர், இமாச்சலபிரதேசத்தில் 2 பேர், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என நேற்று 10 பேர் இறந்துள்ளனர்.  இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக உயர்ந்துள்ளது.