தொடர்ந்து 2வது நாளாக 6000ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!

 
corona

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 4 ஆயிரம், 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன் தினம் இந்தியாவில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 31,194- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 5.63 சதவிகிதமாக உள்ளது. கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.