இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது!

 
covid

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என பதிவாகி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில்  9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்புக்கு மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. இந்தியவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது
.