நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது!

 
corona

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  நேற்று முன் தினம் ஒரே நாளில் இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். இதேபோல் நேற்றைய கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,208- ஆக உயரந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 5 பேர் உயிரிழந்த நிலையில்,  கொரோனா பாதிப்பில் இருந்து  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக இருந்தது. 

இந்நிலையில், இன்று கொரொனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு பின்னர் கொரோனா பதிப்பு ஆயிரத்திற்கு கீழே பதிவாகியுள்ளது.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,354 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 876 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.