பாகிஸ்தானின் F16 விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!
இந்திய விமானப்படை தளங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் F16 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் 2 F16 விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பழிவாங்கும் விதமாக இந்திய விமானப்படை தளங்களைத் தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இந்த நிலையில், இந்திய விமானப்படை தளங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் F16 விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.


