கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர் தானா?? பைரவா நாய் சொன்ன ஜோசியம் பலிக்குமா??

 
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர் தானா?? பைரவா நாய் சொன்ன ஜோசியம் பலிக்குமா??

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என பைரவா என்னும் நாய் கணித்திருக்கிறது. இந்தக் கணிப்பு நிஜமாகுமா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

கர்நாடகாவில் பசவராஜ் த்பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.   224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதை அடுத்து, சட்டப்பேரவை  தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.   கர்நாடகா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.  

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் இவர் தானா?? பைரவா நாய் சொன்ன ஜோசியம் பலிக்குமா??

இந்நிலையில்  கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என 'பைரவா' என்கிற நாய் ஆரூடம் கணித்திருக்கிறது.  மாண்டியாவை சேர்ந்த கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான கோபி என்பவர் 'பைரவா' என்னும் நாயை வளர்த்து வருகிறார்.  இவர், சிறப்பு பூஜை செய்து முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரில்   மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என ஜோசியம் கேட்டிருக்கிறார்.  அப்போது  பைரவா நாய், முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரின் புகைப்படங்களில் இருந்து  குமாரசாமியின் புகைப்படத்தை எடுத்து, அடுத்த முதல்வரை கணித்தது. இந்த நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.