மணிப்பூரில் ராணுவ வீரரின் மனைவிக்கே இந்த நிலைமையா? - அதிர்ச்சி தகவல்கள்

 
manipur

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் ராணுவ வீரரின் மனைவி என தகவல் வெளியாகியுள்ளது. 

மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் ராணுவ வீரரின் மனைவி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ள அந்த ராணுவ வீரர், நாட்டிற்காக கார்க்கில், இலங்கை சென்று பணியாற்றியுள்ளேன். நாட்டை காப்பாற்ற முடிந்த என்னால், எனது மனைவி  காப்பாற்ற முடியவில்லை. அந்த கலவரக்கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.