ஜிஎஸ்எல்வி எஃப் 12 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர்

 
ISRO Somnath

ஜிஎஸ்எல்வி எஃப் 12 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவார் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 செயற்கைகோள் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. காலை 10.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ள  ஜிஎஸ்எல்வி எஃப் 2 ராக்கெட் 2232 கிலோ  எடை கொண்ட என்விஎஸ் 0.2 என்ற செயற்கைக்கோளை தாங்கி செல்கிறது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட் டவுன்' நேற்று தொடங்கிய நிலையில் இன்று ஏவப்பட்டது. கடல்சார் இருப்பிடம், பேரிடர் மேலாண்மை தகவல்களை வழங்கும். செல்போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு, நிதி, மின்துறை நிறுவனங்களுக்கு தரவுகளை பெறமுடியும் என்றும் இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்றும் பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட என்விஎஸ்-01 வழிகாட்டி செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுவட்டப்பதையில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் இஸ்ரோ தலைவர் நன்றியை தெரிவித்துள்ளார்.