எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர்
PSLV C58 ராக்கெட்டில் இருந்து பிரிந்துசென்ற எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டின் முதல் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதற்கான XPoSat உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட். நிறமாலை, தூசு, கருந்துளை, வாயுக்களின் மேகக்கூட்டமான "நெபுலா" குறித்து ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் மொத்தம் 11 செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 60வது வெற்றிப் பயணம் இதுவாகும்.
இந்த நிலையில், PSLV C58 ராக்கெட்டில் இருந்து பிரிந்துசென்ற எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பி.எஸ்.எல்.வி- சி -58 ராக்கெட் பூமியிலிருந்து 650கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு பணியை தொடங்கியது. இந்த ராக்கெட்டில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளது என கூறினார்.