ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம்

 
tirupathi

ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவவுள்ளது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கலத்தை விண்ணில் ஏவ இருக்கிறது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆதித்த்யா எல்-1 விண்கலத்தை போன்று சிரிய அளவிலான மாதிரியை ஏழுமலையான் கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஏழுமலையான் கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.