காவிரி விவகாரம் - மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கர்நாடக முதலமைச்சர் சந்திப்பு

 
siddaramaiah

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்தில் தண்ணீர் திறக்கும் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர். 

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு  5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று  இடைக்கால மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்தில் தண்ணீர் திறக்கும் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர். அம்மாநில துணை முதலமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாரும் உடன் சென்றுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை மத்திய  நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.