காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு! இந்திய ராணுவ வீரர் மரணம்!

 
Tn Tn

காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். 

 

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். உதாம்பூர் மாவட்டம் பாசன்கார்க் பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டை துப்பாக்கிச் சண்டையில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.