மணிப்பூரில் முக்கிய குற்றவாளி வீட்டை அடித்து நொறுக்கிய மெய்தி இன பெண்கள்

 
manipur

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹேராதாஸ் வீட்டை மெய்தி இன மக்கள் அடித்து நொறுக்கினர். 

மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலானது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

manipur

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் வீட்டை கிராம மக்களே அடித்து நொறுக்கினர். கொடூர செயலை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹேராதாஸ் வீட்டை சொந்த கிராம மக்களே அடித்து நெருக்கினர். ஹேராதாசின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி, அவரது வீட்டை மெய்தி பெண்கள் அடித்து நொறுக்கியதுடன், தீயிட்டு கொளுத்தினர்.