சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: அலைமோதும் ஐயப்ப பக்தர்கள்!!
சபரிமலையில் இன்று மகரஜோதியை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கை முன்னிட்டு கடந்த மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஐயப்பனுக்கு நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி மகர விளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது.
மகர விளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது.இதையடுத்து இன்று மாலை 6:30 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டுவரப்படும்.
தங்க திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு சாத்தப்படும். இதன் பிறகு சிறப்பு தீபாரதனை நடைபெற உள்ளது. இதை காண்பதற்கு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.