ஒடிசா ரயில் விபத்து - நேரில் சென்று பார்வையிடுகிறார் மம்தா பானர்ஜி

 
mamata

ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியை மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிடவுள்ளார். 

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
 அப்போது, அந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வேகமாக வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.  இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார். 

இந்நிலையில், ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியை மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிடவுள்ளார். ஏற்கனவே மீட்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுவை அண்டை மாநிலமான மேற்குவங்காள அரசு நேற்று இரவே ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தது. ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவின் பட்னாக்கிடம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விவரங்கள் கேட்டறிந்தார். இதையடுத்து, மம்தா பானர்ஜி இன்று ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பகனாகா பஜார் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார்.