மக்கள் ஆவேசம்! முதல்வர் விழா மேடைக்கு தீ வைப்பு!

 
m

ஆவேசப்பட்ட மக்கள் முதல்வர் விழா மேடையை தீவைத்து எரித்துள்ளனர்.  மணிப்பூர் மாநிலத்தில் நடந்துள்ளது இந்த அதிர்ச்சி சம்பவம்.   முதல்வர் விழா மேடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.  

ma

 மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் என் பிரைன்சிங் விளையாட்டு உபகரணம் வழங்குதல் மற்றும் ஜிம் திறப்பு விழா ஏற்பாடுகள் தொடர்பாக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.   சுராசந்த் பூர் மாவட்டத்தில் இந்த விழா நடக்க இருந்தது.  இதற்காக விழா மேடை தயார் நிலையில் இருந்தது .

இந்த விழா மேடை திடீரென்று தீப்பற்றி எரிந்தது.   தீயணைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அண்மையில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட ஆலயம் மற்றும் மலைவாழ் மக்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் மக்கள் ஆவேசப்பட்டு இந்த தீ வைப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது.  இந்த கோணத்தில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 முதல்வர் விழா மேடைக்கு தீவைப்பு சம்பவம் நடந்துள்ளதால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.