விசாரணைக்கு ஆஜராகும் மணிஷ் சிசோடியா .. டெல்லி சிபிஐ அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு..

 
விசாரணைக்கு ஆஜராகும் மணிஷ் சிசோடியா .. டெல்லி சிபிஐ அலுவலகத்தை சுற்றி 144 தடை உத்தரவு..

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர்  மணிஷ் சிசோடியாவை   சிபிஐ கைது  செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு,  சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது.   இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில்,  இதில்  அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவிற்கு  தொடர்பு இருக்கலாம் எனவும்  சிபிஐ சந்தேகிக்கிறது,  மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது,  அதில் மணிஷ் சிசோடியாவின் பெயர் இடம் பெறவில்லை.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

இந்த நிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சிசோடியாவுக்கு  சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து,  டெல்லி சிபிஐ அலுவலகம் முன்பு 11 மணியளவில் அவர் ஆஜராகிறார். இந்நிலையில்  மணிஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ள நிலையில்,  சில ஆம் ஆத்மி   கட்சி தலைவர்கள் வீட்டு சிறைகளில் வைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சிசோடியா வீட்டு முன்பு  ஆம் ஆத்மி  தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சிபிஐ அலுவலகம் செல்லும் பாதையில் கட்சி தொண்டர்கள் பலர் குவிந்தனர். சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது .

144

இதனையடுத்து  அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததாக மற்றொரு வழக்கை சிபிஐ  அண்மையில் பதிவு செய்துள்ளது. டெல்லி அரசால் உருவாக்கப்பட்ட  ஊழல் கண்காணிப்பு குழு மூலம் உளவு வேலைகளை மணிஷ் சிசோடியா செய்தார் என்றும் சிபிஐ குற்றம் சாட்டுகிறது.  இந்த வழக்கிலோ  அல்லது மதுபான கொள்கை வழக்கிலோ அவர் கைதாக  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  தம்மை சில காலம் சிறையில் வைத்தாலும் தாம் கவலைப்பட போவதில்லை என்றும்  மணீஷ் சிசோடியா செய்துள்ளார்.