இந்திய போர் விமானம் விபத்து.. விமானி உயிரிழப்பு...
ராஜஸ்தானில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் பகுதியில் , இந்துய விமானப் படைக்குச் சொந்தமான மிக் - 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, சாம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது.
விமானத்தை இயக்கிய விமானி விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவலை விமானப் படை உறுதி செய்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
. கடந்த 1971 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், 'மிக்' போர் விமானங்கள் 482 முறை விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில், 171 விமானிகள், 39 பொது மக்கள் 8 சேவை பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் மிக் - 21 ரக போர் விமானங்கள் ஏராளமான முறை விபத்துகளில் சிக்கியுள்ளன. இந்த ரக விமான விபத்துக்கள் குறித்து தொடர்ந்து நிகழ்ந்து வருவதால், , இந்த விமானம் "பறக்கும் சவப்பெட்டி" (flying coffin) என்று அழைக்கப்படுகிறது.