அமைச்சர்& மகனின் கூட்டுச்சதி - துப்பாக்கி சூடுக்கு பலி - எந்த நேரத்திலும் கைது

 
ashis mishra

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா -மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் கூட்டுச்சதிதான் ஜீப்பை ஏற்றி விவசாயிகளை கொன்ற சம்பவம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த கிராமம், உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் இருக்கும் டிகுனியா.  அமைச்சரின் சொந்த கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு உத்தரபிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வருகை புரிந்தார். இதை முன்னிட்டு அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவும் பங்கேற்றனர்.

la

இந்த நிலையில்,  அரியானாவில் நெல் கொள்முதலை தாமதமாக்குவதை கண்டித்து   விவசாயிகள் ஆளுங்கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.  அவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதலை கையாண்டதை கண்டித்து  உத்தரபிரதேசத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி  போராட்டம் நடத்தி வந்தார்கள்.   லக்கிம்பூர் கேரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்திருக்கிறார்கள்.  இதில், ஆத்திரமடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் போராடிய விவசாயிகள் மீது  காரை ஏற்றினார் என்று கூறப்படுகிறது.

as

இந்த சம்பவம் மற்றும் அதனால் எழுந்த வன்முறையினால் 4 விவசாயிகள் உள்பட 9 பேரு உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.   

நடந்த சம்பவத்திற்கும் தனது மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று  மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்து வந்த நிலையில்,  அந்த சம்பவமும், விவசாயிகளின் குற்றச்சாட்டுகளும் உண்மைதான்  என்று ஆதார வீடியோ வெளியானது.  

aj

விவசாயிகள் கூட்டத்திற்குள் கார் சீறிப்பாய்ந்ததில் அடித்து தூக்கி வீசப்படும் அந்த வீடியோ காட்சிகள்  வெளியாகி கண்டனங்கள் மேலும் வலுத்து வருகின்றன.

விவசாயிகள் மீது ஏறிய கார் எங்களுக்கு சொந்தமானதுதான். ஆனால், அந்த சம்பவ இடத்தில் என் மகனும் இல்லை. நானும் இல்லை என்று  அமைச்சர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.  ஆனாலும் விவசாயிகளின் புகாரின் அடிப்படையில், அமைச்சர் அஜய் மிஸ்ரா, அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா  பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 

விவசாயிகள் மீது காரை ஏற்றிய செயல் அமைச்சர் மற்றும் அவரது மகனின் திட்டமிட்ட கூட்டு சதிச்செயல் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்த சம்பவத்தில்  காரை ஏற்றி கொன்றதோடு அல்லாமல் அமைச்சரின் மகன் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில் சுக்விந்தர் சிங் என்கிற விவசாயியின் மகன் குர்விந்தர் உயிரிழந்தார் என்றும் விவசாயிகள் தரப்பினர் கூறிவருகின்றனர்.   இதனால் அமைச்சர் அஜய் மிஸ்ராவும், அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ராவும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவுகிறது.