தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை..
குடியரசுத் தினத்தையொட்டி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
73வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் அங்குள்ள ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். அதேபோல் டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக , குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் உயிர் நீத்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் உள்ள வருகைப் பதிவேட்டிலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இந்த நிகழ்வின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தார். அவரை தொடர்ந்து முப்படை அதிகாரிகளும் போர் நினைவுச் சின்னத்தில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.