மணிப்பூரில் 2 பெண்களுக்கு நடந்த கொடூரம் - முக்கிய குற்றவாளி கைது

 
arrest

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஹேராதாஸ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மணிப்பூரில் சூகி பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த பெண்கள் மர்மநபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் இரு பெண்களும் கதறி அழுவும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான செயலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சூகி பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ITLF தேசிய மகளிர் ஆணையத்திடமும், பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடமும் முறையிட்டுள்ளது.  

இந்நிலையில், மணிப்பூரில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பான வழக்கில் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஹேராதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை  தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.