நீட் தேர்வு குளறுபடி - 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் மறு தேர்வு
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என என்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக கூறப்படும் நிலையில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு, தேசிய தேர்வு முகமையின் பரிந்துரை அடிப்படையில் ஜூன் 23 ஆம் தேதி மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1,563 மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட Score Card-களை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை இன்றே வெளியிட ஆணை கருணை மதிப்பெண்கள் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


