தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே முதல் பேச்சுவார்த்தை!
போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே முதல் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே முதல் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியா, பாகிஸ்தான்
இடையே முதல் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. DGMO-க்களுக்கு இடையே ஹாட்லைன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் DGMO பதற்றத்தை குறைக்க கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.


