"பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது; பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்"- அமித்ஷா

 
s s

பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.


கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட கெடு முடிவடைந்துள்ளது. 


இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக பொதுவெளியில் உரையாற்றிய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, “காஷ்மீரில் சண்டை இன்னும் முடிவடையவில்லை. அதற்குள் பயங்கரவாதிகள் 27 பேரைக் கொன்ற பிறகு போரை வென்றதாக நினைக்கக்கூடாது. பயங்கரவாதத்தைப் பரப்பும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன், இது போரின் முடிவு அல்ல.  ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் வழங்கப்படும்,  தீவிரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள். தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம். பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்” என்றார்.