நடிகையின் நிர்வாண புகைப்படங்கள் - பட அதிபர் தலைமறைவு
ஆசைக்கு உடன்படாவிட்டால் மார்பிங் செய்த நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று பட அதிபர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரில் பட அதிபர் தலைமறைவாகி இருக்கிறார்.
இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. 42 வயதாகும் இந்த நடிகை கடந்த 2001 ஆம் ஆண்டில் வங்க மொழியில் வெளியான ஹேமந்தர் பஹி என்கிற படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் காலா என்கிற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தியில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஷிபுர் என்கிற இந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார். இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கொல்கத்தாவில் கோல்ப் கிரீன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்தி நடிகைகள் எல்லாரும் எந்த பிரச்சினையும் செய்யாமல் என் ஆசைக்கு உடன்படுகிறார்கள். ஆனால் நீ ஏன் மறுக்கிறாய் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் வாங்கி கொடுத்தது நான் தான். அதனால் என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சந்தீப் தொல்லை கொடுக்கிறார் . அவரின் ஆசைக்கு உடன்படவில்லை என்பதால், மார்பின் செய்த என் நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார் என அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தபோது, இது தெரிந்து சர்க்கார் தலைமறைவாகிருக்கிறார். அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.