அதிகரிக்கும் தொற்று பாதிப்பு.. ”ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசும்.. ”- எச்சரிக்கும் மருத்துவர்கள்...

 
Omicron

2 ஆண்டுகளாக   உலுக்கி எடுத்துவரும் கொரோனாவின்  கோரப்பிடியில் இருந்தே இன்னும் உலக நாடுகள் மீண்டு வராத சூழலில்,  ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா  மக்களை  அலற வைக்கிறது.  டெல்டா வைரஸிலிருந்து 50 திரிபுகளாக உருமாற்றமடைந்திருக்கும் ஒமைக்ரான்,  ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.  கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் கண்டறியப்பட்ட  ஒமைக்ரான், அதற்குள்ளாக 79 நாடுகளுக்கு பரவியுள்ளது.

டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும், இதன் பாதிப்பு உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தும் என்றும்  உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தடுப்பூசிகளின் வீரியத்தைக் குறைத்து வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும்,  கவலைக்குரிய வைரஸ் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாதது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், இங்கிலாந்தில் முதல் ஒமைக்ரான் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இது மக்களை மேலும் பீதிக்குள்ளாகியிருக்கிறது.

omicron variant

இந்நிலையில்,  கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள கே.எம்.சி.டி. மருத்துவ கல்லூரியில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் உத்திகள் பற்றி இணைய வழியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரபல தொற்றுநோய் நிபுணரும், தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகருமான டாக்டர் நரேஷ் புரோகித் பங்கேற்றார். இந்தக் கருத்தரங்கில் அவர் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டார்.  அதில், ஒமைக்ரான் பரவல் வேகம் டெல்ட்சா வைரஸை விட அதிகம் என்றும்,  ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை டிசம்பர் 2-ந் தேதி ஒமைக்ரான்  பாதிப்பு 2 பேருக்கு மட்டுமே இருந்தது. நேற்றைய தினம் (டிச17 ) 101 பேருக்கு ஒமைக்ரான் பரவியிருக்கிறது. அதாவது , 14 நாளில் 36 மடங்காக பெருகி இருக்கிறது என்று கூறினார். மேலும் ஒரு ஒமைக்ரான் நோயாளி சூப்பர் ஸ்பிரடர் ஆக மாறி, ஒமைக்ரானை பலருக்கும் பரப்பலாம் என்றும், இன்னும் ஏராளமானவர்களை தொற்றுவதின் மூலம் மிகக்கொடிய நோயாக மாறி மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

vaccine

அதுவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 3 வாரத்தில், ஒமைக்ரான்  77 நாடுகளுக்கு பயணித்திருக்கிறது.  ஒமைக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும்கூட, காட்டுத்தீ போல பரவுவது, உலகமெங்கும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு பெருத்த சவாலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்றும்,  எனவே யாரும் ஒமைக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்  என்றும் தெரிவித்தார். மேலும் இதிலிருந்து  கடந்த கால நோய்த்தொற்றின் மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைத்த எதிர்ப்பு சக்திகளின் மூலம் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.