மீண்டும் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..

 
கொரோனா வைரஸ்


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 12,193 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  

அண்மைக்காலமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் 12,591 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்றைய தினம்  11,692 ஆக குறைந்திருந்தது.  இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும்  அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்  12,193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.  இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  4,48,81,877 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா பரிசோதனை

இதேபோல் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில்  மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை  5,31,300 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து  10,765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.