பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் 2வது நாளாக ஆலோசனை

 
Opposition Meet

பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் (ஜூன்) 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் 6 மாநில முதல்வர்கள் உள்பட 17 எதிர்கட்சிகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து   2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. மாலை 6 மணியளவில்  பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபேற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ,திரிணாமூல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர். 

patna meeting

இந்நிலையில், பெங்களூருவில் இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அதே ஹோட்டலில் நண்பகல் 12 மணி அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தில் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இன்றைய கூட்டத்தில் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.