பதற்றத்தை தணிப்பது குறித்து பரிசீலிப்போம் - பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாக் தர் கூறியுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில்,
இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாக் தர் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாக் தர் பேசியுள்ளார். அப்போது, இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம்; பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என கூறினார்.


