தொடர் அமளியால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு
தொடர் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும், தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
#WATCH | Amid the uproar in Lok Sabha over the Manipur situation, Defence Minister Rajnath Singh said, "Manipur incident is definitely very serious and understanding the situation, PM himself has said that what happened in Manipur has put the entire nation to shame. PM has said… pic.twitter.com/QHW1KHfg0q
— ANI (@ANI) July 21, 2023
#WATCH | Amid the uproar in Lok Sabha over the Manipur situation, Defence Minister Rajnath Singh said, "Manipur incident is definitely very serious and understanding the situation, PM himself has said that what happened in Manipur has put the entire nation to shame. PM has said… pic.twitter.com/QHW1KHfg0q
— ANI (@ANI) July 21, 2023
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்றைய அலுவல்கள் தொடங்கிய நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியின் கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கவும், பிரதமர் அவையில் பதிலளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.