மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் அதிகரிகட்டும் - பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து..
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் , “அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேலும் அதிகரிக்கட்டும். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறபான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.