தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

 
tn

சிங்கப்பூர் அதிபராக தேர்வாகியுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.  சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணை பிரதமராக இருந்த இவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.  அதிபர் தேர்தலில் 70. 4 சதவீத வாக்குகளை பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

pm modi

இந்நிலையில் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.  இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.