நம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 
modi

நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு வரும் நிலையில், பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

மணிப்பூரில் தொடரும் வன்முறை தொர்பாக நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடங்கின. மத்திய அரசுக்கு எதிரான இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் கடந்த 26 ஆம் தேதி வழங்கிய நிலையில் அதன் மீதான விவாதம் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் பதிலளிக்க உள்ளார். அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுபினர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு வரும் நிலையில், பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மக்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பது குறிப்பிடதக்கது.