மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 
அமித் ஷா, மோடி

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே  இருந்து வந்த மோதல் வன்முறையாக வெடித்தது.கடந்த மே மாதம் 3 ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது .இந்த வன்முறையில் இதுவரை, 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், 350க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில்,  மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித் ஷா தலைமையில் நேற்று முன் தினம் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலை குறித்தும், கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கட்சிகள் அனைத்துக் கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர்.

manipur

இந்நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா திரும்பியுள்ளார். இதனையடுத்து அவர் மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.