உலகளாவிய பண்டிகையாக ஓணம் மாறியுள்ளது - பிரதமர் மோடி வாழ்த்து

 
modi

ஓணம் பண்டிகையையொட்டி கேரளா மற்றும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.


இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி கேரளா மற்றும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை நல்ல ஆரோக்கியம், இணையற்ற மகிழ்ச்சி மற்றும் மகத்தான செழிப்புடன் பொழியட்டும். கடந்த பல ஆண்டுகளாக, கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய பண்டிகையாக ஓணம் மாறியுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.