ஜி20 மாநாடு - 15 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் மோடி

 
பைடன் தம்பதிக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கிய பிரதமர் மோடி..

ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி 15 நாட்டு தலைவர்களுடான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது.  அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு  நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன.  அமெரிக்க அதிபர் ஜோபைடன்,  ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர்,  ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை விருந்து அளிக்கிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். 

modi

இந்த நிலையில், ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வங்கதேச பிரதமர் மற்றும் இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 15 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ஜி20 மாநாட்டில் உலக தலைவர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.