சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி புதிய இந்தியாவின் மனவலிமைக்கு எடுத்துக்காட்டு - பிரதமர் மோடி பெருமிதம்

 
மன் கி பாத்தில்

புதிய இந்தியாவின் மனவலிமைக்கு எடுத்துக்காட்டாக இந்த சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது. சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23ம் தேதி  மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. 

rover

இதனை தொடர்ந்து  விக்ரம் லேண்டரில் இருந்து இறாங்கிய பிரக்யான் ரோவரின் செயல்பாடு தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்தது.   நிலவின் தென் துருவ பகுதியில் தரையிரங்கியுள்ள விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தூரம் நகர்ந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ரோவரின் புதிய வீடியோக்களை இஸ்ரோ அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக இஸ்ரோ விஞ்ஞானிகளை இந்தியா மட்டுமின்று உலக நாடுகளும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியில் சந்திரயான் 3 திட்டடத்தின் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:  இந்த வெற்றி மிக பெரியது. அதுபற்றி எவ்வளவு பேசினாலும் மிகையாகாது. புதிய இந்தியாவானது, அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றி பெற விரும்புவதுடன், எந்தவொரு சூழலிலும் எப்படி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிந்து வைத்துள்ளது. புதிய இந்தியாவின் மனவலிமைக்கு எடுத்துக்காட்டாக இந்த சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி அமைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.