எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு - குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

 
tn

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பிப்ரவரி 2, 2024 அன்று தாயும் மகளும் மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சரின் உதவியை நாடச் சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.  

tn

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எடியூரப்பா , சம்பந்தப்பட்ட சிறுமி, அவரது தாயுடன் சில நாட்களுக்கு முன் ஏதோ பிரச்னை என்று எனது வீட்டுக்கு வந்தார்; நானும் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை அழைத்து அவர்களுக்கு உதவச் சொன்னேன் திடீரென சிறுமியின் தாய் எனக்கு எதிராக பேசத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்தேன் நடந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்த நிலையிலும் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். 

tn

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை, குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) விசாரணைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .