மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா

 
anurag

உலக கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் போராடி தோற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வாழ்த்து பெற்றார் 

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முதல்நிலை வீரர் கார்ல்சன் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில், டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நாரே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார். நாக் அவுட் உலகக்கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் கோப்பையை பெறுவது இதுவே முதல்முறையாகும். டைபிரேக்கர் போட்டியின் முதல் சுற்றில் கார்ல்சன் வென்ற நிலையில், இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா கார்ல்சனிடம் போராடி தோற்றார். இதன்மூலம் உலகக்கோப்பை 2 ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். 18 வயதில் செஸ் உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா என்ற சாதனையை படைத்தார். 

இந்த நிலையில், உலக கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டியில் போராடி தோற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்று பிரக்ஞானந்தாவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.  பிரக்ஞானந்தா மற்றும் அவரது பொற்றோரை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.