புதுச்சேரி சிறுமி கொலை - மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

 
tn

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ்க்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

tn
புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில்  9 வயது சிறுமி  கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாயமான சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த கால்வாயில் சிறுமியின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர்  மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

TN

இந்நிலையில் புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ்க்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. 7 நாள் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.