ஜன.14-ல் யாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி

 
Rahul Gandhi

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத நியாய யாத்திரையை' ஜன.14-ல் தொடங்கி மார்ச் 20ல் நிறைவு செய்கிறார் ராகுல்காந்தி.

rahulஇதுதொடர்பாக  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் , மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’யை ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை  நடத்த  காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

rahul

இதன் மூலம்  இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுடன் கலந்துரையாட உள்ளார் ராகுல் காந்தி. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வருகிற 14ஆம் தேதி இந்த யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்  என்று குறிப்பிட்டுள்ளார்.