ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு

 
ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது மோடி எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன் என்று விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக  சூரத் பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . அத்துடன் அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியது.  தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைதாண்டனை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். 

Rahul

இந்நிலையில்அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனைக்கு தடைக்கோரிய  ராகுல் காந்தியின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்க உரிய காரணங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.