பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதலா?- ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி
பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை, இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது முக்கியம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லக்னோவில் பிரம்மோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதியை காணொலி காட்சி வாயிலாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது, நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் முக்கியம். உத்தரபிரதேச பாதுகாப்பு வழித்தடத்தில், விமான உற்பத்தி, ட்ரோன்கள் உள்ளிட்ட பெரிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வாஜ்பாய் தலைமையில், விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி நமது வலிமையை உலகிற்கு காட்டினர். பொதுமக்களை இலக்காக வைத்து நாம் தாக்குதல்கள் நடத்தவில்லை. இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது முக்கியம்.
எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுடன் மட்டும் நமது நடவடிக்கையை நிறுத்திவிடவில்லை. இந்தியப் படைகளின் முழக்கம் பாகிஸ்தானின் ராணுவ தலைமையகமான ராவல்பிண்டி வரை சென்றுள்ளது. அங்குள்ள பல ராணுவ இலக்குகளைத் தாக்கி வலுவான பதிலடியை வழங்கியது. தீவிரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு உணர்த்தியது. தீவிரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா குறிவைத்து தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் வழிபாட்டுத்தலங்கள் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. தீவிரவாதிகளின் இருப்பிடம் தகர்க்கப்படும் என்பதே இந்தியா உலகிற்கு சொன்ன பாடம்” என்றார்.


