கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு..
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கும் மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் எண்ணெய் விலை 6 விழுக்காடு உயர்ந்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இடம் பெற்றுள்ள ஒபெக் அமைப்பின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. 13 நாடுகள் அங்கம் வகிக்கக்கூடிய அந்தக் கூட்டமைப்பின் கூட்டத்தில் எண்ணெய் விலையை சீராக வைத்திருக்க தினசரி உற்பத்தியை 10 லட்சம் பேரர்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மே மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது இருந்தபோதிலும் சில நாடுகள் உற்பத்தியை குறைக்க தொடங்கியுள்ளன.
இதனால் கூட்டமைப்பிலிருந்து தினசரி பெறப்படும் கச்சா எண்ணெய் அளவு 11 லட்சம் பேரல் வரை குறையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் வரை 70 டாலர் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு பாரல் கச்சா எண்ணெய் 6 விழுக்காடு வரை உயர்ந்து, 80 டாலரை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகமாக இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல் , டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.