எனக்கு நெய்மரை தான் பிடிக்கும். மெஸ்ஸியை பற்றிய கேள்விக்கு பதில் எழுத மாட்டேன்.. 4ம் வகுப்பு கேரள மாணவி

 
ரிசா பாத்திமா பீவி, விடைத்தாள்

நான் பிரேசில் ரசிகை, எனக்கு நெய்மரை பிடிக்கும், எனக்கு மெஸ்ஸியை பிடிக்காது, மெஸ்ஸியை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன் என்று கேரளாவை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி விடைத்தாளில் எழுதியிருந்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம் நாட்டில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு அதிக பிரபலம். இருப்பினும், கால்பந்து விளையாட்டு மக்களிடம் தற்போது பிரபலமாகி வருகிறது. கேரளாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கால்பந்து மோகம் கொண்டவர்கள். கேரளாவின் திரூரின் நடந்த சம்பவம், நாட்டின் இளம் வயதினரும் கூட கால்பந்து மோகத்தால் இப்போது யாரோ ஒருவர் மீது வலுவாக ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.

நெய்மர்

கேரளாவில் திரூரில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயதான மாணவி ரிசா பாத்திமா பீவி. அண்மையில் ரிசா பாத்திமா பீவி, பள்ளி தேர்வில், மாணவர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட சில குறிப்புகளின் உதவியுடன் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற கேள்விக்கு பதில் எழுதவில்லை. ஆனால் நான் ஏன் அந்த கேள்விக்கு பதில் எழுதவில்லை என்பதை காரணத்தை விடைத்தாளில் எழுதி இருந்ததுதான் ஹைலட்.

மெஸ்ஸி

நான் இந்த கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன். நான் பிரேசில் ரசிகை. எனக்கு நெய்மரை பிடிக்கும். எனக்கு மெஸ்ஸியை பிடிக்காது என்று விடைத்தாளில் எழுதி இருந்தார். அவர விடைத்தாள் புகைப்படத்தை அவளது ஆசிரியர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து அது வைரலானது. மேலும், நெய்மர்  மற்றும் ரொனால்டோவின் பல குட்டி ரசிகர்கள் விடைத்தாளில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர் என உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன என்று கலீஜ் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.