ரூ.500 நோட்டு திரும்பபெறப்படமாட்டாது - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 
s s

2026 ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பபெறப்படும் என்று யூடியூபில் வெளியான தகவல் தவறானது என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்குள் ரூ.500 நாணயத்தாள்கள் செல்லாது? அரசு என்ன சொன்னது?

ஜூன் 2 ஆம் தேதி 'கேபிடல் டிவி' என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரூ.500 நோட்டுகள் படிப்படியாக செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையே குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்திய நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.


இந்நிலையில் "ரூ. 500 நோட்டுகள் ரத்து செய்யப்படவில்லை, அவை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்" என்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு, எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் குடிமக்களுக்கு அது அறிவுறுத்தியது.